Monday, March 14, 2016

கீதை - 14.9 - குணமெனும் சங்கிலி

கீதை - 14.9 - குணமெனும் சங்கிலி 


सत्त्वं सुखे संजयति रजः कर्मणि भारत ।
ज्ञानमावृत्य तु तमः प्रमादे संजयत्युत ॥१४- ९॥

ஸத்த்வம் ஸுகே² ஸஞ்ஜயதி ரஜ: கர்மணி பா⁴ரத |
ஜ்ஞாநமாவ்ருத்ய து தம: ப்ரமாதே³ ஸஞ்ஜயத்யுத || 14- 9||


ஸத்த்வம் = சத்வ குணம்

ஸுகே = சுகத்தில்

ஸஞ்ஜயதி = பிணிக்கிறது

ரஜ: = ரஜோ குணம்

கர்மணி = செயல்களில்

பா⁴ரத = பாரதக் குலத் தோன்றலே

ஜ்ஞாநம் = ஞானம்

அமாவ்ருத்ய = சூழ்கிறது

 து = ஆனால்

 தம: = தமோ குணம்

 ப்ரமாதே = குழப்பத்தில்

 ஸஞ்ஜயத் யுத = பிணைக்கிறது


சத்வம் குணம் இன்பத்தின் மூலம் நம்மை பிணைக்கிறது.  பாரதா, ரஜோகுணம் செய்கையின் மூலம் நம்மை பிணைக்கிறது. தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து  மயக்கத்தில் பிணிக்கிறது.


சத்வ குணம் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் தருவதன் மூலம் நம்மைக் கட்டுப் படுத்துகிறது.

ரஜோ குணம் நம்மை செயலில் மூழ்க வைத்து கட்டிப் போடுகிறது.

தமோ குணம் அறிவை மயங்க வைத்து, உள்ளுர்ணர்வு சொல்ல்வதைக் கேட்டகாமல் குழப்பத்தில் நம்மை கட்டிப் போடுகிறது.

தங்கச் சங்கிலியாக இருந்தாலும் , சங்கிலி, சங்கிலிதானே.

முன்பே சொன்னதுதான். மீண்டும் ஒரு முறை வலியுறுத்துவதன் நோக்கம், குணங்கள் பிணைக்கின்றன என்பதை நினைவூட்டத்தான்.

இந்த குணங்கள் எப்படி செயல்படுகின்றன, இவற்றைத் தாண்டி எப்படி போவது  என்பது பற்றி பின்னே வரும் சுலோகங்களில் காணலாம்.

(For other slogas: http://bhagavatgita.blogspot.in/2016/03/149.html )




No comments:

Post a Comment