Saturday, May 21, 2016

கீதை - 15.15 - நினைப்பும், ஞானமும், மறதியும் நான் - பாகம் 2

கீதை - 15.15 - நினைப்பும், ஞானமும், மறதியும் நான் - பாகம் 2


सर्वस्य चाहं हृदि संनिविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च ।
वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् ॥१५- १५॥

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி³ ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச |

வேதை³ஸ் ச ஸர்வைரஹமேவ வேத் யோ
வேதா ந்தக்ருத் வேத விதே வ சாஹம்

ஸர்வஸ்ய = அனைத்திலும்

ச = மேலும்

அஹம் = நான்

ஹ்ருதி = இதயமாக

ஸந்நிவிஷ்டோ = அமர்ந்து இருக்கிறேன்

மத்த: = என்னில் இருந்து

ஸ்ம்ருதிர் = வேதங்கள்

ஜ்ஞாநம் = ஞானம்

அபோஹநம் = எடுத்துச் செல்வது, மறப்பது

ச = மேலும்

வேதை³ஸ் = வேதங்களும்

ச = மேலும்

ஸர்வை = அனைத்திலும்

அஹம் = நான்

ஏவ = நிச்சயமாக

வேத்யோ  = அறிந்து கொள்ள , புரிந்து கொள்ள


வேதாந்த க்ருத் = வேதாந்தங்களை செய்பவன்

வேத விதே  = வேதாந்தங்களை அறிந்து கொள்பவன்

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

அஹம்  = நான்



அனைவரின் இதயத்திலும் (உள்ளேயும்) நான் இருக்கிறேன்.

நினைப்பும், ஞானமும், மறதியும் என்னிடம் இருந்து உருவாகின்றன.

வேதங்களில் அறியப்படும் பொருள் நான்.

வேதத்தை உருவாகியவன் நான்.

வேதத்தை அறிபவன்  நான்.




அனைத்தின் இதயமாகவும் நான் இருக்கிறேன்.

எத்தனை ஆயிரம் முறை சொன்னாலும் , நாம் புரிந்து கொள்ள மறுக்கும் ஒரு தத்துவம் உண்டென்றால், அது இதுதான். 

இறைவனை வெளியே தேடுவதை, வெளியே உள்ள இறைவனை தொழுவதை, சிலைகளுக்கும் , படங்களுக்கும் பூஜை செய்வதை நாம் நிறுத்தவே மாட்டோம். கீதை சொல்கிறது,  "நான் அனைத்தின் இதயமாக இருக்கிறேன்" என்று. உங்களுக்குள் மட்டும் அல்ல, அனைத்தின் உள்ளும் இருப்பது தான் அது. உங்களுக்கு உள்ளே  இருக்கும் ஒன்றை வெளியே ஏன் தேடுகிறீர்கள் ? 

உங்களுக்குள் இருக்கும் ஒன்றை நீங்கள் அறியாவிட்டால், வெளியே உள்ளதை எப்படி அறிவீர்கள் ? 

என்னிடம் இருக்கும் ஒன்றை நான் ஏன் வெளியே தேட வேண்டும் ?

நான் எப்படி எனக்குள் இருக்கும் ஒன்றை அறிந்து கொள்வது ?

முதலில், வெளியே தேடுவதை நிறுத்த வேண்டும். வெளியில் தேடுவது என்பது, உள்ளே இருக்கும் ஒன்றை தேடாமல் இருப்பதற்கான எளிய வழி. கோவில்களில், சிலைகளில், படங்களில், மற்ற மனிதர்களில், புத்தகங்களில் எங்கும் தேடுவதை நிறுத்த வேண்டும். 

பின் எங்குதான் தேடுவது ? 

உங்களுக்குள் தேடுங்கள். 

அது எப்படி தேடுவது ? எனக்குள் நான் எப்படி தேட முடியும் ? அப்படி தேட யாரும் சொல்லித் தரவில்லையே ? நானே எப்படி தேடுவேன் ?

அதற்குத்தான் கீதை சொல்கிறது "கற்றவற்றை மற". வெளியில் தேட கற்றுக் கொன்றவற்றை மற. மறக்காதவரை, அந்தத் தேடலை செய்யாவிட்டால் ஏதோ தவறு செய்வது போல இருக்கும். 

சுவாமிக்கு பூஜை செய்ய வேண்டும், சுலோகம் சொல்ல வேண்டும், விரதம் இருக்க வேண்டும் என்று நமக்குச் சொல்லித் தரப் பட்டிருக்கிறது. அப்படி செய்யா விட்டால் ஏதோ பாவம் செய்வது போல நம்மகுத் தோன்றும். அப்படி தோன்றிக் கொண்டிருந்தால், உள்ளே தேட முடியாது. 

எனவே, அதை மறக்க வேண்டும். அப்படி ஒன்றை கற்றுக் கொண்டதாகவே இருக்கக் கூடாது. 

இது சரி தானா ? இல்லை, கீதைக்கு ஏதோ வலிந்து பொருள் சொல்வதாகப் படுகிறதா உங்களுக்கு ?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?


(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/05/1515-2.html

No comments:

Post a Comment