Tuesday, March 27, 2018

கீதை - 1.17 - பாண்டவப் படைத் தளபதிகள் - தொடர்கிறது

கீதை - 1.17 - பாண்டவப் படைத் தளபதிகள் - தொடர்கிறது 


काश्यश्च परमेष्वासः शिखण्डी च महारथः।
धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः॥१७॥

காஸ்²யஸ்²ச பரமேஷ்வாஸ: ஸி²க²ண்டீ³ ச மஹாரத²:|
த்⁴ருஷ்டத்³யும்நோ விராடஸ்²ச ஸாத்யகிஸ்²சாபராஜித: ||1-17||

காஸ்²யஸ்²ச பரமேஷ்வாஸ: = பெரிய வில்லாளியான காசி இராஜன்

ஸி²க²ண்டீ³ ச மஹாரத²: |  = மஹாரதனான சிகண்டியும்

த்⁴ருஷ்டத்³யும்நோ = திருஷ்டத்துய்மனனும்

விராடஸ்²ச = விராடனும்

ஸாத்யகிஸ்²சாபராஜித: = வெல்ல முடியாத சாத்யகியும் (அபராஜித = வெல்ல முடியாத) ||1-17||


கீதையின் நோக்கம் இந்தப் பட்டியலைத் தருவது அல்ல. இன்னும் இரண்டு ஸ்லோகங்களில் இந்த பட்டியல் முடிந்து விடும். பின், கீதையின் முக்கிய போதனை தொடங்கும்.

கீதையை மஹாபாரதத்தில் எங்கு வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். பாண்டவர்கள் வன வாசத்தில் இருந்த போது நிறைய நேரம் இருந்தது. அங்கு , அனைத்து பாண்டவர்களுக்கும் கண்ணன் கீதையை போதித்து இருக்கலாம்.

அங்கெல்லாம் விட்டு விட்டு, போர்க்களத்தை தேர்ந்து எடுக்கிறான்.

நல்ல விஷயங்களை சரியான முறையில் அறிந்து கொள்ள ஒரு மன நிலை வேண்டும்.

வனவாசத்தில், பாண்டவர்களுக்கு கவுரவர்கள் மேல் கோபமும், நாட்டை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற ஆவலும் இருந்திருக்கும். கீதையை கேட்டாலும் புரிந்திருக்காது.

வனவாசத்தில் பல ரிஷிகள் , பாண்டவர்களுக்கு எவ்வளவோ கதைகள் தத்துவங்கள் இவற்றை எடுத்துச் சொன்னார்கள். நடந்தது என்ன ? போர்க் களத்தில்  வந்து நின்றார்கள்.


என்ன நடக்கப் போகிறது என்று கவனிப்போம்.

http://bhagavatgita.blogspot.in/2018/03/117.html


No comments:

Post a Comment